உள்ளூர் செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-09-07 08:28 GMT   |   Update On 2022-09-07 08:28 GMT
  • மதுரையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
  • இந்த தகவலை மதுரை கோ.புதூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் வெளியிட்டுள்ளார்.

மதுரை

மதுரை கோ.புதூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மேலூர் தெற்கு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கிழக்கு கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (8-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின் வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News