உள்ளூர் செய்திகள்
இரு சக்கர வாகனங்கள் மோதி கட்டிட தொழிலாளி பலி
- இரு சக்கர வாகனங்கள் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.
- இந்த விபத்து குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் ஆவியூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 38). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவம் (40) என்பவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றனர். பாரப்பத்தி பகுதியில் சென்றபோது கியாஸ் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் வெள்ளைச்சாமி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுபற்றி தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ளைச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.