உள்ளூர் செய்திகள்

முதியவர்கள் உள்பட 5 பேர் தற்கொலை

Published On 2022-08-23 08:22 GMT   |   Update On 2022-08-23 08:55 GMT
  • முதியவர்கள் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 முதியவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

மதுரை:

கீரைத்துறை, காமராஜ புரம், குமரன் சாலையைச் சேர்ந்த மணி மகன் சீனிவாசன் (வயது 21), கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த சீனிவாசன், நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

முதியவர்கள்

ஹார்விப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). இவருக்கு உடல் நலக்குறைவு இருந்தது. சம்பவத்தன்று நள்ளிரவு இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

மதுரை தேவிநகர் செக்கடி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. முதியவரான இவருக்கு உடல் நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன. வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் சம்பவத்தன்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 முதியவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

கூலித்தொழிலாளி

பெத்தானியாபுரம், மேட்டு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (55). கூலித் தொழிலாளி. இவருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்திய டைந்த சிவகுமார், நேற்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வாலிபர்

குலமங்கலத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ் (28). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக, மன பதட்டத்தில் இருந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் குலமங்கலம், ராணி மங்கம்மாள் சந்திப்பு பகுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். செல்லூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News