உள்ளூர் செய்திகள்

பெண் வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது

Published On 2022-08-08 09:50 GMT   |   Update On 2022-08-08 09:50 GMT
  • பெண் வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அண்ணாநகர் போலீசார் கவுண்டன் கால் பகுதியைச் சேர்ந்த தண்டீஸ்வரன், ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

மதுரை

மதுரை பாண்டியன் நகர், சிவசக்தி தெருவை சேர்ந்த உதயபாண்டி மனைவி பாலம்மாள் (27). இவர் வண்டியூர், சவுராஷ்டிராபுரம் தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு இவர் ஓட்டலில் இருந்தார். அங்கு குடிபோதையில் வந்த 2 பேர் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றனர். இதை பாலம்மாள் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல், பெண் வியாபாரியை கத்தியால் குத்தி விட்டு தப்பியது.

 இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் கவுண்டன் கால் பகுதியைச் சேர்ந்த தண்டீஸ்வரன், ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News