உள்ளூர் செய்திகள்

வானொலி என்றே தொடர வேண்டும்- குமரி அனந்தன் வேண்டுகோள்

Published On 2023-05-09 03:16 GMT   |   Update On 2023-05-09 03:16 GMT
  • வானொலி என்றிருந்ததை ஆகாஷ்வாணி என்று பெயர் மாற்ற முனைந்தபோது நாங்களெல்லாம் அறப்போராட்டம் நடத்திச்சென்றோம்.
  • வானொலி என்று அழைத்ததை இப்போது ஆகாஷ்வாணி என அழைக்க நினைப்பது நியாயமல்ல.

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்பு வானொலி என்றிருந்ததை ஆகாஷ்வாணி என்று பெயர் மாற்ற முனைந்தபோது நாங்களெல்லாம் அறப்போராட்டம் நடத்திச்சென்றோம். சாத்தூர் வைப்பாற்றின் மணல் திடலிலே குன்றக்குடி அடிகளார், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோரை அழைத்து, பெரிய மாநாடு நடத்தி வானொலி என்றே இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.

அப்போது அதை ஏற்று வானொலி என்று அழைத்ததை இப்போது ஆகாஷ்வாணி என அழைக்க நினைப்பது நியாயமல்ல. வானொலி என்றே தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News