உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் சிறந்த நூலகமாக குலசேகரன்பட்டினம் நூலகம் தேர்வு - அமைச்சர்கள் விருது வழங்கி பாராட்டு

Published On 2023-11-21 09:11 GMT   |   Update On 2023-11-21 09:11 GMT
  • பள்ளி கல்வித்துறை பொது நூலகத்துறை சார்பில் எஸ்.ஆர். அரங்கநாதன் நூலக விருது வழங்கும் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடந்தது.
  • தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் நூலகம் தமிழ்நாட்டில் முதன்மை நூலகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் நூலகர் மாதவனுக்கு அமைச்சர்கள் விருது வழங்கினர்.

உடன்குடி:

பள்ளி கல்வித்துறை பொது நூலகத்துறை சார்பில் எஸ்.ஆர். அரங்கநாதன் நூலக விருது வழங்கும் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் நூலகம் தமிழ்நாட்டில் முதன்மை நூலகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் நூலகர் மாதவனுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் விருது வழங்கினர்.

தொடர்ந்து 5-வது முறையாக மாநில விருது பெற்ற நூலகர் மாதவனுக்கு வி.வி.பி., கல்வி டிரஸ்ட் சேர்மனும், தட்சணமாற நாடார் சங்க கல்லூரி செயலாளர் வி. பி. ராமநாதன், தஞ்சாவூர் தொழிலதிபர் நடராஜன், தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் சந்திரசேகர், நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், சிவகங்கை மாவட்ட நூலக அலுவலர் ஜாண் சாமுவேல் மற்றும் வாசிப்பு இயக்க பொருளாளர் ஜெகநாத பெருமாள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News