உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர்.

தேவதானப்பட்டியில் கிருஷ்ணஜெயந்தி விழா

Published On 2022-08-20 06:51 GMT   |   Update On 2022-08-20 06:51 GMT
  • தேவதானப்பட்டி ெமயின்ரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது.
  • கிருஷ்ண ஜெயந்தியையொட்டி 3 நாட்கள் திருவிழா நடை பெற்றது.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி ெமயின்ரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி 3 நாட்கள் திருவிழா நடை பெற்றது. பல்வேறு சமூக த்தினர் பால்குடம் எடுத்து சிறப்பு அபிஷேகம் செய்த னர்.

மேலும் சாமி பூப்பல்ல க்கில் ஊர்வலமாக வந்தார். அதன்பின்னர் உறியடி, வழுக்கு மரம் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேவதானப்பட்டி இன்ஸ்பெ க்டர் சங்கர் தலைைமயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணா சேகர் மற்றும் விழா கமிட்டி யினர் செய்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News