உள்ளூர் செய்திகள்
- 4 வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
- உடனடியாக பொறுப்பேற்க வேண்டும்
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் சிவகுமார் கரூர் வட்டாட்சியராகவும், அங்கிருந்த பன்னீர் செல்வம் இந்து சமய அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் அலுவலக தனி வட்டாட்சியராவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் கரூர் உதவி ஆணையர் அலுவலக தனி வட்டாட்சியராக இருந்த வெங்கடேசன் குளித்தலை சமூக பாதுகாப்பு திட்டதனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த கலியமூர்த்தி குளித்தலை வட்டாட்சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.