உள்ளூர் செய்திகள்

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-17 09:10 GMT   |   Update On 2022-08-17 09:10 GMT
  • தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி

கரூர்:

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு வழங்கி, சமூக நீதியை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News