உள்ளூர் செய்திகள்
கரூரில் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
- ஜூலை 5-ம் தேதி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் உழவர் தின பேரணி மற்றும் கோரிக்கை மாநாட்டை சிறப்பாக நடத்துவது
- மாநாட்டில் 2000 விவசாயிகளை பங்கேற்க செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரூர்:
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் பாலு குட்டி தலைமையில் நடந்தது.
இதில் வரும் ஜூலை 5-ம் தேதி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் உழவர் தின பேரணி மற்றும் கோரிக்கை மாநாட்டை சிறப்பாக நடத்துவது, மாநாட்டில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவழைத்து கோரிக்கை மனுக்களை அளிப்பது, மாநாட்டில் 2000 விவசாயிகளை பங்கேற்க செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில தலைவர் சண்முகம், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் தங்கராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஆலோசகர் ராக்கி முருகேசன், நிர்வாகி காலனி மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.