உள்ளூர் செய்திகள்
மேகபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
- மேகபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு
கரூர்:
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகளூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் காலபைர வருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண் பிக்கப்பட்டது. இதேபோல் வேலா யுதம்பாளையம் அருகே தோட்டக் குறிச்சி, சேங்கல் மலை அடிவாரத்தில் உள்ள பைரவர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர்களால் அலங் காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.