உள்ளூர் செய்திகள்

பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Published On 2023-04-14 06:22 GMT   |   Update On 2023-04-14 06:22 GMT
  • பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
  • அன்னதானம் வழங்கப்பட்டது

கரூர்:

புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News