உள்ளூர் செய்திகள்
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
- அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து நடைபெற்றது
கரூர்:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கரூரில் அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து அகிலஇந்திய முற்போக்குப் பெண்கள் கழகம் சார்பில் மாவட்ட அமைப்பாளர் பிலோமினாமேரி தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள், சங்கத்தினர் கலந்து கொண்டனர்.