உள்ளூர் செய்திகள்
புலியூர் பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்
- புலியூர் பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது
கரூர்
கரூர் கோட்டத்திற்குட்பட்ட புலியூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் (இயக்குதலும் - காத்தலும்) கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.