உள்ளூர் செய்திகள்
- விஷம் குடித்த பெண் தற்கொலை செய்து கொண்டார்
- வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்
கரூர்:
குளித்தலையை அடுத்த, குச்சிப்பட்டியை சேர்ந்தவர் சின்னமுத்து. மனைவி வெள்ளையம்மாள் (வயது 42) விவசாயக் கூலி தொழிலாளி. இவர், கடந்த 10 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி, வயிற்று வலி தாங்க முடியாமல் வெள்ளையம்மாள் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளையம்மாள் உயிரிழந்தார். இது குறித்து சின்னமுத்து அளித்த புகாரின்படி குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.