உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்ற 7 பேர் கைது

Published On 2022-11-28 09:26 GMT   |   Update On 2022-11-28 09:26 GMT
  • சட்ட விரோதமாக மது விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்
  • 306 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

கரூர்:

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப் இன்ஸ்பெக்டர் அழகுராம், சட்டம் ஒழுங்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிங்காரம், மதியழகன் மற்றும் போலீசார், பாலவிடுதி, மாயனூர், வாங்கல், தான்தோன்றி மலை, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர்.

அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக மாரியம்மாள் (வயது 45), மாரி முத்து (46), ஜமுனா (41), தொட்டியன் (40), தங்கம்மாள் (52), ராஜலிங்கம் (72), பழனியப்பன் (62)ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 306 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News