உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் கைது

Published On 2022-08-16 09:23 GMT   |   Update On 2022-08-16 09:23 GMT
  • சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கரூர்:

குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு, சிவாயம், கணக்கப்பிள்ளையூர், மலைப்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பகுதிகளுக்கு சென்ற போலீசார் அங்கு மது விற்ற கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் (வயது 55), மேலபட்டியை சேர்ந்த வையாபுரி (62), கணக்கப்பிள்ளையூரைச் சேர்ந்த தமிழழகன் (62), மலைப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 23 பதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News