உள்ளூர் செய்திகள்

சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2022-08-24 08:13 GMT   |   Update On 2022-08-24 08:13 GMT
  • சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
  • 2 சேவல், 2 கத்தி பறிமுதல்

கரூர்:

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகேயுள்ள அத்திபாளையம்புதூர் தனியார் கிரஷர் அருகே நொய்யல் ஆற்றுப்படுகையில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக க.பரமத்தி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சேவல் காலில் கத்திக்கட்டி சண்டை நடத்திய கூலித்தொழிலாளிகளான முன்னூர் தமிழரசன் (வயது 29), புன்னம்சத்திரம் பிள்ளையார் கோயில் தெரு திலிப் (21), பெருமாள் நகர் மாதேஷ் (23), ஈரோடு மாவட்டம் குப்பம்பாளையம் வஉசி நகர் சந்திரசேகர் (34) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து, 2 சேவல்கள், 2 கத்திகளை க.பரமத்தி போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News