உள்ளூர் செய்திகள்

இளம் பெண் தற்கொலை

Published On 2022-10-03 07:33 GMT   |   Update On 2022-10-03 07:33 GMT
  • கணவரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை
  • கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

நாகர்கோவில்:

கீரிப்பாறை அருகே உள்ள தடிக்காரன் கோணம் குட்டி பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் ரதீஸ். இவரது மனைவி அபிஷா (வயது 26).

இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கணவன் மனைவி இருவரும் இரவு நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் தனித்தனி அறையில் தூங்க சென்றனர்.அபிஷா குழந்தையுடன் தனி அறையில் தூங்கினார்.

நேற்று காலையில் வெகுநேரமாகியும் அறை யில் கதவு திறக்கப்ப டவில்லை .இதையடுத்து ரதீஷ் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அபிஷா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கீரிப்பாறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய அபிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு உள்ளார் .அபிஷாவின் கணவர் மற்றும் உறவினர்களிடமும் அபிஷாவின் பெற்றோரி டமும் ஆர்டிஓ விசாரணை நடத்தினார்.

Tags:    

Similar News