உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் அருகே தீக்குளித்து தற்கொலை செய்தது யார் ?

Published On 2022-08-09 07:56 GMT   |   Update On 2022-08-09 07:56 GMT
  • போலீஸ் விசாரணை தீவிரம்
  • சுசீந்திரம் அருகே ஆசிரமம் பகுதியில் சாலை ஓரத்தில் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

நாகர்கோவில்:

சுசீந்திரம் அருகே ஆசிரமம் பகுதியில் சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.இது பற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பெட்ரோல் ஊற்றி அவர் கொலை செய்யப் பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது.இது தொடர்பாக விசாரிக்க 2 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் வாலிபர் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வாலிபர் தற்கொலை செய்து இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News