உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் பம்மம் சேக்ரட் ஹார்ட் பள்ளியில் ரத்ததான முகாம்
- ரத்த தானம் செய்வதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு
- ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் என 50 பேர் ரத்ததானம்
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் பம்மத்தில் அமைந்துள்ள சேக்ரட் ஹார்ட் இன்டர்நே ஷனல் பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நிம்ஸ் மருத்துவ கல்லூரியின் ரத்த வங்கி குழுவினர், பள்ளி முதல்வர் மணி சுரேஷ், நிர்வாக அலுவலர் அருள் ததேயுஸ் ராஜ், ஒருங்கிணைப் பாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜெனிஷியா வரவேற்றார்.
நிம்ஸ் மருத்துவ கல்லூரியின் ரத்த வங்கி தலைவர் ருபீனா மருத்துவ ரீதியிலான தகவல்களையும், ரத்த தானம் செய்வதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துரைத்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.
இதில் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் என 50 பேர் ரத்ததானம் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். முடிவில் ஆசிரியர் சோனியா நன்றி கூறினார்.