உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

அஞ்சுகிராமம் அருகே கள்ளக்காதலை தட்டி கேட்ட இளம்பெண் அடித்து கொலை

Published On 2023-02-08 07:19 GMT   |   Update On 2023-02-08 07:19 GMT
  • புகாரின் பேரில் ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
  • போலீசார் ஜார்ஜை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில்:

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் நிலப்பாறை திருமூலநகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 45). இவரது மனைவி மேரி சைலஜா (40) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

ஜார்ஜ் கொத்தனார் வேலை செய்து வந்தார். அவருடன் வேலை செய்து வரும் பெண் ஒருவருக்கும் ஜார்ஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் மேரி சைலஜா விற்கு தெரியவந்தது. இதை யடுத்து அவர் கணவரை கண்டித்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட் டது. சம்பவத்தன்று மேரி சைலஜா வீட்டில் இருந்தார்.

அப்போது வீட்டிற்கு வந்த ஜார்ஜிடம் இனி அந்த பெண்ணுடன் தொடர்பு வைக்கக்கூடாது என்று கூறி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜார்ஜ் மனைவி மேரி சைலஜாவை சரமாரியாக தாக்கினார். இதில் மேரி சைலஜா படுகா யம் அடைந்தார்.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாகர்கோ விலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது. இதுகுறித்து மேரி சைலஜாவின் தாயார் ராஜம் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை யில் இருந்த மேரி சைலஜா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக் காக மாற்றப்பட்டு உள்ளது. போலீசார் ஜார்ஜை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். மேரி சைலஜா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

Tags:    

Similar News