கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் நடந்தபோது எடுத்த படம்
அயக்கோட்டில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்
- ஊராட்சி தலைவர் பிடி.செல்லப்பன் தொடங்கி வைத்தார்
- சிறந்த கால்நடை பராமரிப்பிற்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி:
அயக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியாலா பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விழாவிற்கு கால்நடை பராமரிப்புத்துறை தக்கலை கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் எட்வர்ட்தாமஸ் தலைமை தாங்கினார். மருத்துவ முகாமை அயக்கோடு ஊராட்சி மன்ற தலைவர் பிடி.செல்லப்பன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர்.எஸ்.எஸ் செந்தில் லேகா, டாக்டர் செய்யதுரிசால், கால்நடை ஆய்வாளர் ஜெரால்டு ஆல்வின்தாஸ், ஆகியோர் கலந்துக்கொண்டனர் முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிட்சை அளித்தல், செயற்கைமுறை கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை மலடு நீக்க சிகிச்சை அளித்தல், கோழிகளுக்கு தடுப்பூசி தாது உப்புக் கலவை வழங்குதல், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறந்த கால்நடை பராமரிப்பிற்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் கவிதா, மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.