உள்ளூர் செய்திகள்

குடியரசுதின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

நாகர்கோவிலில் குடியரசுதின விழா முன்னேற்பாடு பணிகள்

Published On 2023-01-18 07:57 GMT   |   Update On 2023-01-18 07:57 GMT
  • கலெக்டர் அரவிந்த் ஆலோசனை
  • நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

நாகர்கோவில்:

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. விழாவில் கலெக்டர் அரவிந்த் கொடியேற்றி வைக்கிறார்.

குடியரசு தின விழா விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அரவிந்த் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார். இந்த நிலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உடன் இருந்தார்.

Tags:    

Similar News