உள்ளூர் செய்திகள்
- மராட்டிய மாநிலத்தில் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார்.
- திருவட்டார் போலீசார் தீவிர விசாரனை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே மேலவீட்டுவிளை, வடக்கநாடு, செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53).
இவர் மராட்டிய மாநிலத்தில் தனது அண்ணன் ஞானதாஸ் உடன் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர்களது தாயார் திருவட்டாரில் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ராஜேந்திரன் கடந்த 18-ந் தேதி ஊருக்கு வரும்படி இவரது மனைவி தங்கலீலா தகவல் கொடுத்தார்.
அன்று மராட்டியத்தில் இருந்து ஊருக்கு கிளம்பியவர் இதுவரைக்கும் ஊர் வந்து சேரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் இல்லை.
இதனால் காணாமல் போன தனது கனவரை கண்டுபிடித்து தரும்படி திருவட்டார் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி புகார் செய் தார். போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு தீவிர விசாரனை செய்து வருகிறார்கள்.