உள்ளூர் செய்திகள்

கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.

தஞ்சாவூா் அரசு மகளிர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

Published On 2023-08-13 09:19 GMT   |   Update On 2023-08-13 09:19 GMT
  • தமிழ் இலக்கியங்களில் புதிய தேடல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
  • முடிவில் முனைவா் கரிகாலன் நன்றி கூறினாா்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழாய்வுத் துறை சாா்பில் தமிழ் இலக்கியங்களில் புதிய தேடல்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சண்முகலிங்கன், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவன முன்னாள் இயக்குநா் பக்தவத்சலபாரதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தோ்வு நெறியாளா் மலா்விழி, உதவிப் பேராசிரியா் தமிழ்ச்செல்வி, முனைவா் சம்பகலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்த் துறைத் தலைவா் வைஜெயந்தி மாலா வரவேற்றாா். முடிவில் முனைவா் கரிகாலன் நன்றி கூறினாா்.

Tags:    

Similar News