புதிய புற நோயாளிகள் பிரிவு கட்டிடம் திறப்பு
- 1.5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவுக்காக 1.5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
புதியதாக திறக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்
நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் திலகம், பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் குமரவேல், டாக்டர் ராஜசேகர், பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதிகண்ணதாசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர், கோவி அய்யாராசு, பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மருத்து வமனை செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்து இருந்தனர்.