தஞ்சையில், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
- மருத்துவ காப்பீடு, ஈமச்சடங்கு ஆகியவற்றை வழங்க வேண்டும்.
- குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்க ன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட பொருளாளர் உமா தலைமை வகித்தார். வீராசாமி, கமலா , ஸ்ரீமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகள் கூறியதன் படி முறையான சிறப்பு பென்சன் ரூ .6750-ஐ டி.ஏ. உடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு, ஈமச்சடங்கு ஆகியவற்றை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ப ட்டன.
இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் மனோகரன், தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் ஆறுமுகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாநில முன்னாள் செயலாளர் அம்புஜம் காமராஜ் , சங்க மாநில துணைத்தலைவர் மதிவாணன் , சங்க மாநில செயலாளர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை ஒன்றிய பொருளாளர் விஜயா நன்றி கூறினார்.