உள்ளூர் செய்திகள்

கடத்தூர் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணிகள்

Published On 2022-06-25 08:49 GMT   |   Update On 2022-06-25 08:49 GMT
  • கடத்தூர் பேரூராட்சியில் தூய்மைப்பணி இயக்கம் நடந்தது.
  • பேரூராட்சி தலைவர்,கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 15 வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் 8, 9,மற்றும் 10வது வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி தலைவர் மணி, துணைத்தலைவர் தீர்த்தகிரி ,கவுன்சிலர்கள் முனிராஜ், சரவணன், கார்த்திக், சபியுல்லா, மயில்சாமி, மற்றும் பேரூராட்சி இளநிலை உதவியாளர் மோகன், சதீஷ்குமார் , பச்சியப்பன் மற்றும் தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்,

அப்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சார்பில் வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து குப்பைகளை வீடுகளில் சேகரித்து பணியாளரிடம் வழங்கவேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News