உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய காட்சி.

குலசேகரன்பட்டினத்தில் இந்து சமய பண்பாடு விழா

Published On 2023-08-26 08:50 GMT   |   Update On 2023-08-26 08:50 GMT
  • இந்து சமய பண்பாட்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
  • தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 5 பள்ளிகளில் இருந்து 105 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள குலசகரன்பட்டினம் பண்டாரசிவன் செந்திலாறுமுகம் நினைவுப் பள்ளியில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் இந்து சமய பண்பாட்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விவேகானந்தா கேந்திரத்தின் சமூக நல தொண்டர் சண்முகபாரதி தலைமை தாங்கி சமுதாய முன்னேற்றத்தில் கேந்திரம் ஆற்றி வரும் பணிகள், போட்டிகளின் நோக்கம், விதிமுறைகள், பாரத பண்பாட்டில் ஒழுக்கநெறிகள், வீரம், விவேகத்துடன் வாழ்வது குறித்து பேசினார்.தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 5 பள்ளிகளில் இருந்து 105 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு உடன்குடி பிரியாகேஸ் ஜெ.தர்மராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் ஆசிரியர்கள் பொன்ராஜ், சந்திரபோஸ், சின்னத்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News