விளாத்திகுளம் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- செஸ் போர்டு வாங்க முதல் கட்டமாக ரூ.5 ஆயிரத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாணவிகளிடம் வழங்கினார்.
விளாத்திகுளம், செப்.27-
விளாத்திகுளம் அருகே உள்ள செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது பாடப் புத்தகத்தில் உள்ள கேள்விகளை மாணவ, மாணவிகளிடம் கேட்டு சரியான பதிலை கூறிய மாணவிகளுக்கு ரூ.1000-ம் பரிசளித்தார்.
அப்போது மாணவிகள் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.விடம், நாங்கள் செஸ் ஒலிம்பியட் போட்டியில் பங்கேற்று வந்துள்ளோம். ஆனால் பள்ளியில் செஸ் போர்டு இல்லை என்றனர். அதற்கு நான் உடனடியாக செஸ் போர்டு வாங்கி தருவதாக உறுதி அளித்து முதல் கட்டமாக ரூ.5 ஆயிரத்தை மாணவிகளிடம் வழங்கினார்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி, பள்ளி உதவி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சசிகுமார், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமை ப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.