உள்ளூர் செய்திகள்

பூச்சொரிதல் விழா நடந்தது.

முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

Published On 2023-08-21 09:43 GMT   |   Update On 2023-08-21 09:43 GMT
  • முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
  • சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பாபநாசம்:

பாபநாசம் அடுத்த மாளாபுரம் கிராமத்தில் உள்ள நல்லமுத்து முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

பின், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News