உள்ளூர் செய்திகள்
வானகரத்தில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து
- வானகரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிளைவுட் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
சென்னை:
சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிளைவுட் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.
சமையல் எண்ணெய் குடோனில் பரவிய நெருப்பு, பிளைவுட் குடோன் உள்பட 3 இடங்களில் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எரிந்து நாசமாகின. கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி உள்பட 6 நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.