உள்ளூர் செய்திகள்
சகோதரர்களை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
திருவிழாவில் மோதல் சகோதரர்களை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த வருகின்றனர்
வருசநாடு :
தேனி மாவட்டம் கண்டமனூர் ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் நாகராஜ்(40). இவருக்கும் அவரது உடன்பிறந்த சகோதரரான அழகுவாடன் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் கிடாவெட்டும் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. நேற்று நாகராஜ் தனது மற்றொரு சகோதரரான கணேசனுடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அழகுவாடன், பால்பாண்டி, கருப்புசாமி, சின்னசுருளி, காவல்காரன் ஆகிய 5 பேரும் சேர்ந்து அவர்களை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.