உள்ளூர் செய்திகள்
பெண் வக்கீல் தூக்குப் போட்டு தற்கொலை
- நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே பெண் வக்கீல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்ததால் பெண் வக்கீல் தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள வளையபட்டியைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது 40) .இவரது மனைவி நித்யா (35) இவர்களுக்கு கடந்த 2014 டிசம்பரில் திருமணமாகி டேனிஸ் (7) தயானி (4) என 2 குழந்தைகள் உள்ளனர்.
இருவரும் மோகனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.கணவன் மனைவி இருவரும் வக்கீல்களாக உள்ளார்கள்.இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த நித்யா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் சேர்ந்த ராஜேஸ்வரி (66) மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.