உள்ளூர் செய்திகள்
நாமக்கல்லில் முட்டை விலை 50 காசுகள் உயர்வு
- முட்டை கொள்முதல் விலை 470 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
- தட்டுப்பாடு காரணமாகவும் முட்டை விலை அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் லில் நடந்தமுட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 50 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 470 காசுக ளாக நிர்ணயம் செய்யப்பட்டது.தமிழகத்திலும், வடமாநி லங்களிலும் பண்டிகைகள் முடிந்து முட்டை நுகர்வு அதிக ரித்து இருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாகவும் முட்டை விலை அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் கறிக்கோழி கிலோ ரூ.66-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.10 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி விலை கிலோ ரூ.76-ஆக உயர்ந்தது.