உள்ளூர் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆேலாசனை கூட்டம் நடைபெற்றது.
- ஊராட்சிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அர.சக்கரபாணி ஆலோசனைப்படி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆேலாசனை கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் ராஜாமணி தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன் முன்னிலை வகித்தார்.
தெற்கு ஒன்றிய லெக்கையன்கோட்டை, அத்திக்கோம்பை ஊராட்சி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர்பொன்ராஜ்,மாவட்ட இளைஞர் அணிஅமைப்பாளர் ஹரிஹரசுதன், ஒன்றியக் குழு பெருந்தலைவர் அய்யம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், தண்டபாணி, செல்லம்மாள் மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.