உள்ளூர் செய்திகள்
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர்.
- மாநிலப் பொருளாளர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.
தஞ்சாவூர்:
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து தஞ்சைரெயிலடியில் மக்கள் அதிகாரம் சார்பில் மாவட்டச்செயலர் தேவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலப் பொருளாளர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் திருவாரூர்-நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்சண்முகசுந்தரம்,குடந்தை வழக்குரைஞர்ஜெயபாண்டியன்,தஞ்சை இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில இணைச்செயலர் ராவணன் மற்றும் அருள், எழுத்தாளர் தஞ்சை சாம்பான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.