உள்ளூர் செய்திகள்

கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-25 09:46 GMT   |   Update On 2023-08-25 09:46 GMT
  • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்க வேண்டும்.

கும்பகோணம்:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட துணை தலைவர் ராமநாதன் தலைமையில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாநில துணை தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் அய்யப்பன், மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன், வட்ட தலைவர் முருகையன், முகம்மது ஜாக்கீர், வட்ட துணை தலைவர் கீதா, வட்ட செயலாளர் சந்தானம், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News