உள்ளூர் செய்திகள்
வருசநாடு அருகே சேதமடைந்த தார்ச்சாலையால் தொடர் விபத்துகள்
- 5 கி.மீ. தொலைவிலான தார்ச்சாலை வருசநாடு வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
- புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான சுமார் 5 கி.மீ. தொலைவிலான தார்ச்சாலை வருசநாடு வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
இதனால் சாலையைச் சீரமைக்கவும், புதுப்பிக்கவும் வருசநாடு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட அளவிலான சாலை அதிகளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்குத் தகுதியற்றதாக காணப்படுகிறது.
மேலும் சேதமடைந்த சாலையால் தொடர்ந்து வாகன விபத்துகள் ஏற்பட்டுவருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.