உள்ளூர் செய்திகள்
கவர்னருக்கு எதிராக காங்கிரஸ் போராடும்- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
- அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தைச் சீர்குலைக்க முயற்சி செய்து வருவதை அனுமதிக்க முடியாது.
- வகுப்புவாத அடிப்படையில் மக்களைப் பிளவுப்படுத்துகிற கருத்துக்களை ஆர்.என்.ரவி கூறுவதை இனியும் நிறுத்தவில்லையெனில் அவருக்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு மட்டும் விரோதி அல்ல. அரசமைப்புச் சட்டத்திற்கும் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும் விரோதமாக செயல்பட்டு, அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தைச் சீர்குலைக்க முயற்சி செய்து வருவதை அனுமதிக்க முடியாது.
வகுப்புவாத அடிப்படையில் மக்களைப் பிளவுப்படுத்துகிற கருத்துக்களை ஆர்.என்.ரவி கூறுவதை இனியும் நிறுத்தவில்லையெனில் அவருக்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.