உள்ளூர் செய்திகள்
மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி. போராட்டம்
- மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
- இதில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற புகைப்படத்தை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 'மக்களுக்காக நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. எங்கள் குரல்கள் நெரிக்கப்படுகின்றன, எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கேள்விகளுக்கு பதில் இல்லாமல் மத்திய அரசு திணறுவதால் எங்கள் கேள்விகள் முடக்கப்படுகின்றன. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக இந்த அரசு நடத்தும் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தேசத் தந்தையின் சிலைக்கு முன்னால் நாங்கள் ஒன்று திரண்டு போராடினோம்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.