உள்ளூர் செய்திகள்

ஊரணிபுரம் கடை வீதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊரணிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-08 09:40 GMT   |   Update On 2023-07-08 09:40 GMT
  • ராகுல் காந்தி எம்பி பதவியை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • ஊரணிபுரம் கடைவீதியில் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவோணம்:

தஞ்சாவூர் மாவட்டம்ஊ ரணிபுரத்தில் ராகுல் காந்தி எம்பி பதவியை நீக்கியது செல்லும் என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவோணம் அருகே ஊரணிபுரம் கடைவீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி, தலைமை தாங்கினார், காங்கிரஸ் திருவோணம் வட்டார தலைவர் முத்து,

முன்னிலை வகித்தார், மேலும் முன்னாள் கவுன்சிலர் மோகன்ராஜ், முருகையன், நகரத் தலைவர் அருணா ராஜேந்திரன் , ரத்தினவேல், முத்து பழனிவேல், சேசு, பாலசுப்பிரமணியன், பன்னீர்செல்வம், வி எஸ், வீரப்பன், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் தீர்ப்பை திரும்ப பெற கோரி கோஷமிட்ட வாரு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News