உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

சின்னமனூரில் கல்லூரி மாணவி மாயம்

Published On 2022-10-31 04:58 GMT   |   Update On 2022-10-31 04:58 GMT
  • கடைக்கு செல்வதாக கூறி சென்ற கல்லூரி மாணவி திடீரென மாயமானார்.
  • புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி:

சின்னமனூர் கே.கே.குளம் பழனியாண்டி சேர்வை தெருவை சேர்ந்த ராஜா மகள் சிவரஞ்சனாதேவி (வயது19).

இவர் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்ற அவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் அவரைதேடி வருகின்றனர்.

Tags:    

Similar News