உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

உடன்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

Published On 2023-06-14 08:38 GMT   |   Update On 2023-06-14 08:38 GMT
  • உடன்குடியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
  • இதில் குழந்தை தொழிலாளர்கள் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உடன்குடி:

உடன்குடியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி, விஜயலதா, மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குழந்தை தொழிலாளர்கள் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பணியாளர் செல்விபிளாரன்ஸ், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ஜெயாதுரைப்பாண்டியன், விரிவாக்க அலுவலர் கிறிஸ்டி விஜயராணி, மெஞ்ஞானபுரம் சுகாதாரஆய்வாளர் ரஞ்சித், மகளிர்குழு உறுப்பினர் ஜெனோரீட்டா, சரோஜா மற்றும் வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News