search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pledge"

    • இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது
    • புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை

    அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளினையொட்டி தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

    இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அம்பேத்கர் பிறந்தநாளான, சமத்துவ நாளினையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை. பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • அண்ணல் அம்பேத்கர் பிறந்த திருநாளான ஏப்ரல் 14-ஆம் நாளை, "சமத்துவ நாள்" என அறிவித்துள்ளோம்
    • அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றி வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம்

    அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ல் தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள் மராட்டிய மாநிலத்தில் பிறந்தவர். இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர், பரோடா மன்னர் உதவியுடன் அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார். உயர் கல்விக்காக வெளிநாட்டிற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அண்ணல் அம்பேத்கருக்கு உண்டு.

    தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த சாதி காரணமாக இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளுக்கும் அவமானத்திற்கும் ஆளானவர். அதன் காரணமாக, தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துக் கடுமையாகப் போராடியவர். பல்லாயிரக் கணக்கானவர்களுடன் இந்து சமயத்தை துறந்து புத்த சமயத்தைத் தழுவியவர்.

    பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர். ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர், சமூக நீதிப் புரட்சியாளர் எனப் பன்முகத்திறன்களைப் பெற்றவர். இந்திய அரசியல் அமைப்புச் சாசனத்தின் வரைவுக் குழுத் தலைவராக விளங்கிய மிகப்பெரிய சட்ட மேதை அம்பேத்கர். நாடு சுதந்திரம் அடைந்த பின், பிரதமர் நேரு அமைச்சரவையில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் திகழ்ந்தவர்.

    அண்ணல் அம்பேத்கரின் புகழைப் போற்றும் வகையில் வியாசர்பாடி அரசுக் கலைக் கல்லூரிக்கு அம்பேத்கர் அரசுக் கலைக் கல்லூரி என்றும், சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என்றும் பெயர் சூட்டியதுடன், சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் அமைத்து, அதில் அவர் சிலையையும் நிறுவி அம்பேத்கரைப் போற்றியுள்ளது தி.மு.க. அரசு

    சாதி-சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்கிய அண்ணல் அம்பேத்கர் பிறந்த திருநாளான ஏப்ரல் 14-ஆம் நாளை, "சமத்துவ நாள்" என அறிவித்துள்ளோம். அந்நாளில் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் ! அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றி வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம்.!. என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அரசு அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அரசு அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டின் இறையாண்மையையும், சமநல சமுதாயமும், சமயச் சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் உள்ள கால அலுவலகம் அருகே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் செயல் இயக்குநர் (இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர் (பேப்பர் புரொடக்சன்) மகேஷ், துணைப் பொது மேலாளர் (சேப்டி மற்றும் செக்யூரிட்டி) ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர்(மனித வளம்) சிவக்குமார், மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன், துணை மேலாளர் (பாதுகாப்பு) சங்கிலி ராஜன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    புகளூர் டி.என்.பி.எல். காகித ஆலையில் தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நா ளை முன்னிட்டு தேசிய ஒரு மைப்பாடு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நமது நாட்டில் பெருகிவரும் சாதி, மத, மொ ழி பாகுபாடுகளை எதி ர்க்கும் வகையில் வன்மு றையில் ஈடுபடாமல் மக்களின் உணவுப்பூர்வ ஒற்றுமைக்கு பாடுபடவே ண்டி தேசிய ஒருமைப்பாடு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைப் பொது மேலாளர் (சேப்டி மற்றும் செக்யூரிட்டி) ராதாகி ருஷ்ணன், உதவி பொது மேலாளர்( ஐ.டி) பாலமுருகன்,

    முதுநிலை மேலாளர்( மனித வளம்) சிவக்குமார் ,முதுநிலை மேலாளர்( மெக்கானிக்கல் )அசோகன், மேலாளர் (மனித வளம் )வெங்க டேசன் ஆகியோர் தலைமை யில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    • தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு வார விழா நடந்தது.
    • விழாவில் உறுதிமொழி எடுத்தல் மரம் நடுதல் விழா நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    70- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் 7 நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    கூட்டுறவு வார விழாவின் முதல் நாள் நிகழ்வாக கூட்டுறவு கொடியேற்றுதல், உறுதிமொழி எடுத்தல் மற்றும் மரம் நடுதல் விழா தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர், வார விழா குழு தலைவர்பழனீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் வார விழா குழு துணை தலைவருமான பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் அப்துல்மஜீத், பொது விநியோகத் திட்ட துணைப்ப திவாளர் கருப்பையா, மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள்சந்தான லட்சுமி, அன்புச்செ ல்வன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சிய ர்பன்னீர்செல்வம், மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர்கண்ணன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    காற்று மாசுபாடு தவிர்த்து, விபத்தில்லா தீபாவளி கொண்டாடபுதுக்கோட்டை ஏ.வி.சி.சி. மழலையர் பள்ளி மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு

    புதுக்கோட்டை,  

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று எவ்வாறு மாசுபடுகிறத. அதனால் விளையும் தீமைகள் யாவை என்பது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம், புதுக்கோட்டை திலகர் திடல் ஏ.வி.சி.சி. மழலையர் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் மல்லிகாகணேசன் தலைமை வகித்தார்.

    மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தீபாவளி பலகாரம் அடங்கிய பைகளையும், மாசில்லா தீபாவளி கொண்டாட்டம் என்ற பிரசுரங்களையும் பள்ளியின் நிறுவனரும், முன்னாள் ஊரக வளர்ச்சி திட்ட அலுவலருமான ஏவிசிசி கணேசன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    பள்ளி ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், மாசில்லா தீபாவளியை மனதார கொண்டாடுவோம் என்று

    பெற்றோர்கள் முன்னிலையில் ஒவ்வொரு குழந்தையும் ஆர்வத்துடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை பார்வையாளர்களும், பொதுமக்களும் பெரிதும் பாராட்டினர்.

    • மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும்.

    சுவாமிமலை:

    தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் கார்த்தி வித்யாலயா கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடந்தது.

    இதில் தீயணைப்பு துறை நிலைய அதிகாரி பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பருத்தி ஆடைகள் அணிந்து கொண்டு மாணவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

    மேலும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பின்னர், மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சிக்காக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பள்ளி தலைவர் கார்த்திகேயனை, மாணவர்களின் பெற்றோ ர்கள் பாராட்டினர்.இதில் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் கலந்துகொண்டு மாணவர்கள் பட்டாசு வெடிக்கும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அருகில் வைத்துக்கொள்ள கூடாது என விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் பேசினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் அம்பிகாபதி செய்திருந்தார்.

    இதில் தீயணைப்பு துறை பணியாளர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இன்ஸ்பெக்டர் சுதா, மாணவிகளிடையே 'ஊழல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
    • மாணவர்கள் "ஊழலை மறப்போம் தேசத்தை காப்போம்" என்னும் கருத்து அமைந்த விழிப்புணர்வு வீதி நாடகத்தினை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்த ம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரோடு இணைந்து சர்தர் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு ஊழல் ஒழிப்பு வார விழாவினை நடத்தியது.

    உறுதிமொழி

    நம் நாட்டின் பொருளா தாரம், அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் முக்கிய தடையாக உள்ளதை உணர்ந்து ஒவ்வொரு குடிமகனும் நேர்மை. கண்ணியத்துடன் ஊழலை ஒழிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும், ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை கல்லூரி முதல்வர் பொ. ஜெயந்தி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதா மற்றும் அனிதா ஆகியோர் முன்னிலையில் மாணவிகள் லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன் என்றும், மக்கள் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுத்தனர்.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுதா, மாணவிகளிடையே 'ஊழல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் மாணவிகளிடம் ஊழல் சார்ந்த புகார்களை தெரிவிக்கும் வழிமுறைகளை குறித்த துண்டு பிரசாரத்தை காவல்துறையினர் வழங்கினர்.

    வீதி நாடகம்

    பின்னர் கல்லூரியின் வேதியியல்துறை மற்றும் தமிழ்த்துறை மாணவிகள் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் "ஊழலை மறப்போம் தேசத்தை காப்போம்" என்னும் கருத்து அமைந்த விழிப்புணர்வு வீதி நாடகத்தினை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை, சப்-இன்ஸ்கெ்டர் தளவாய் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் மா. ஜான்சி ராணி முனைவர் ரெ. சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

    • தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி மற்றும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சி இன்று நடந்தது.
    • இதில் 75-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    இந்திய அரசு கலாச்சா ரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஏக் திவாஸ் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி மற்றும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் கோபால கிருஷ்ணன் முன்னிலையிலும் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் தலைமையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 75-க்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் நல சங்கம் மாணவர்கள் கலந்து கொண்டு கலைஞர் நகரிலிருந்து தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு தேசிய ஒற்றுமைக்கான ஓட்டம் ஓடி வந்தனர்.

    பின்னர் தென்னகப் பண்பாட்டு மையம் வந்தடைந்தவுடன் மாணவர்கள் மற்றும் தென்னகப் பண்பாட்டு மைய அலுவலர்கள் அனைவரும் ஏக் திவாஸ் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவர்களுக்கு தென்னக பண்பாட்டு மைய இயக்குநர் சான்றிதழ் வழங்கினார்.

    • பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிநடைபெற்றது.
    • புளியநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டு மொத்த தூய்மை பணிகள் நடந்தது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் தூய்மையை சேவை பணி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார்.

    இதில் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், களப்பணியாளர்கள், மஸ்தூர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தூய்மை சேவை பணி உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து புளியநகர், நடுவக்குறிச்சி, மாசிலாமணிபுரம் மற்றும் செபத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் ஒட்டு மொத்த தூய்மை பணிகள் நடந்தது. பின்னர் பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது
    • தூய்மை பணியாளர்களும் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் நேற்று தூய்மை பணி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கி தூய்மை சேவைபணியை தொடங்கி வைத்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை சேவைபணிக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பின்பு பேரூராட்சியில் உள்ள பஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளி வளாகம், அனைத்து வீதிகளிலும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து நாட்டுநல பணிதிட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியும் தூய்மை பணியா ளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது.

    தூய்மை பணி குறித்து ஓவியப்போட்டி பனப்பாக்கம் அரசு மாதிரி பள்ளியில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.சீனிவாசன், கோகிலா, ராஜேஸ்வரி, சஞ்சீவி, சகிலா விநாயகமூர்த்தி, சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா, சுகாதார மேற்பார்வை யாளர் பிரவீன்குமார், உதவி தலைமை ஆசிரியர் செந்திக்குமார் மற்றும் தூய்மை பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

    • மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல் அவைகளை பாதுகாக்க வேண்டும்.
    • முன்னதாக லயன்ஸ் சங்க செயலாளர் சிவ. நாடிமுத்து அனைவரையும் வரவேற்றார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கம், பட்டுக்கோட்டை ஹோஸ்ட் லயன் சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா வார விழா மற்றும் மரம் நடும் துவக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பட்டுக்கோ ட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவரும் திருச்சி கோட்ட ரெயில்வே உபயோகிப்போர் குழு உறுப்பினருமான ஜெயராமன் தலைமை வகித்தார்.

    லயன் சங்கத் தலைவர் அன்பழகன் ரெட் கிராஸ் சங்கத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    லயன்ஸ் சங்க செயலாளர் சிவ. நாடிமுத்து வரவே ற்றார். புதுடில்லி காவல்துறை கூடுதல் ஆணையாளர் சத்தியசுந்தரம் ஐ.பி.எ.ஸ். தூய்மை பணியையும் மரம் நடும் விழாவையும் துவக்கி வைத்து பேசுகையில் :

    மக்கள் ஆரோக்கியமாக வாழ தூய்மை மிக அவசியம். எனவே பொது இடங்களையும் , நமது நாட்டையும் தூய்மையாக பாதுகாக்க வேண்டும்.

    அதுபோல நம் நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகா க்கவும் நல்ல காற்றினை நாம் சுவாசிக்கவும் நிறைய மரங்களை நாம் வளர்க்க வேண்டும்.

    மரக்கன்றுகளை நடுவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் அனைவரும் தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .

    அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் 100 பேர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகங்கள், ரயில் பாதைகள், சாலைகள் ஆகியவற்றில் உள்ள குப்பை களை அகற்றினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நிலைய தலைமை அதிகாரி மருது பாண்டியன் விதை அறக்கட்டளை நிறுவனர் சக்தி காந்த், பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கத்தின் மரம் வளர்ப்பு ஒருங்கிணை ப்பாளர்கள் ராமமூர்த்தி, சுப்பிரமணி, சங்கர் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    முடிவில் பட்டுக்கோ ட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் விவேகானந்தம் நன்றி கூறினார்.

    ×