உள்ளூர் செய்திகள்

சுதுரங்க போட்டி நடந்தது.

அரசு பெண்கள் பள்ளியில் சதுரங்க போட்டி

Published On 2022-08-06 10:15 GMT   |   Update On 2022-08-06 10:15 GMT
  • போட்டியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • வெற்றி பெறும் மாணவிகளுக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

பாபநாசம்:

பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் லீலாதேவி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிலம்பரசன் சதுரங்க போட்டியினை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், பாபநாசம் அரிமா சங்க தலைவர் செங்குட்டுவன், முன்னாள் தலைவர் செந்தில் மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். போட்டியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் மாணவிகளுக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News