உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

குஜிலியம்பாறை அருகே பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு

Published On 2022-08-17 05:36 GMT   |   Update On 2022-08-17 05:36 GMT
  • பைக்கை பின்தொடர்ந்த வாலிபர் பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்கநகை மற்றும் ரூ.75ஆயிரத்தை பறித்துச்சென்றார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்:

குஜிலியம்பாறை அருகே கூடலூரை சேர்ந்தவர் வாசுகி(46). இவர் திருமக்கம்பட்டியை சேர்ந்த காளியம்மாளிடம் ரூ.75ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.

அதனை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு வாலிபர் வாசுகியின் பைக்கை நிறுத்தி அவரிடமிருந்து 3 பவுன் தங்கநகை மற்றும் ரூ.75ஆயிரத்தை பறித்துச்சென்றார்.

இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News