உள்ளூர் செய்திகள்

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது வழக்கு

Published On 2022-12-22 07:54 GMT   |   Update On 2022-12-22 07:54 GMT
  • பிரபாகரன் ( வயது 50). விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் கரும்பு பயிட்டு உள்ளார்.
  • கரும்பு வெட்டும் தருவாயில் உள்ளது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜமீன் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 50). விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் கரும்பு பயிட்டு உள்ளார். கரும்பு வெட்டும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில், பிரபாகரனின் தோட்டத்திற்கு செல்ல புறம்போக்கு நிலத்தில் தடம் உள்ளது. இந்த தடம் வழியாக பல ஆண்டாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் ஜமீன் இளம்பிள்ளை அருகே இ.நல்லா கவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், அவரது மகன் அஜித் ஆகியோர் இந்த புறம்போக்கு தடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் தடுத்து உள்ளனர். இதனிடையே தோட்டத்தில் விளைந்துள்ளள கரும்பை வெட்டுவதற்காக, பிரபாகரன் வியாபாரியுடன் தோட்டத்திற்கு சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த விஸ்வநாதன், அவரது மகன் அஜித் ஆகியோர் பிரபாகரனையும், அவருடன் வந்த வியாபாரியையும் தகாத வார்த்தைகளால் திட்டி, இந்த வழியாக யாரும் வரக்கூடாது, மீறி வந்தால் உங்களை கொன்று விடுவேன் என்று கையில் வைத்திருந்த ஆயுதங்களை காட்டி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து பிரபாகரன் இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், விஸ்வநாதன், அஜித் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News