உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

Published On 2022-09-05 10:48 GMT   |   Update On 2022-09-05 10:48 GMT
  • மடுவுகாவிரி ஆற்றில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் நிர்வாண நிலையில் கிடந்தது.
  • யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கோட்டை மடுவுகாவிரி ஆற்றில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் நிர்வாண நிலையில் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.இது குறித்து சிங்கிரிபட்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்யராஜ் கொளத்தூர் போலீசில் புகார் செய்தார்.

கொளத்தூர் போலீசார் பிணத்தை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News